மேலும் செய்திகள்
'ஊழல் தடுப்போம்' உறுதிமொழியேற்பு
28-Oct-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு வாரம் நேற்று முதல், வரும் நவ.,2 வரை, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கடைபிடிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
28-Oct-2025