உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஐயப்பன், முருகன், விநாயகர் உற்சவம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஐயப்பன், முருகன், விநாயகர் உற்சவம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கோட்டை தெரு மலை அடி-வாரத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், எட்டாம் ஆண்டு வருஷாபி ேஷகம், மண்டல பூஜை நேற்று நடந்தது. இதை-யொட்டி காலை, 9:00 மணிக்கு ஐயப்பன், முருகன், விநாயகர் உற்சவ மூர்த்திகளின் பல்லக்கு உற்சவம் நடந்தது. 100க்கும் மேற்-பட்ட மாலை அணிந்த ஐயப்ப சுவாமிகள், சூளகிரி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சிவன், பார்வதி, நரசிம்மர், முருகன், விநாயகர், கருப்பசாமி உட்-பட பல்வேறு சுவாமிகளின் வேடமணிந்து பக்தர்கள் ஆடி வந்-தனர். கேரள மாநில செண்டை மேளம் முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடி பக்தர்கள் சென்றனர். ஏற்பாடுகளை, தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை