உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த மங்கம்மாபுரத்தில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து எருது விடும் விழாவை நடத்திய சங்கர், 53 மற்றும் 9 பேர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல வேப்பனஹள்ளி மாரியம்மன் கோவில் அருகே, அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது தொடர்பாக வேப்பனஹள்ளி போலீசார் சங்கர்ராவ், 39, மற்றும் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி