அனுமதியின்றி எருது விடும் விழாநடத்திய 8 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி:வேப்பனஹள்ளி அடுத்த பெரிய பொம்மரசனப்பள்ளியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து எருதுவிடும் விழா நடத்திய அப்பகுதியை சேர்ந்த திம்மி நாயுடு மற்றும் 4 பேர் மீது வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.அதே போல மகராஜகடை அருகே உள்ள பெரிய தக்கேப்பள்ளியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக அருண் மற்றும் 2 பேர் மீது மகராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.