கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவன மின் இணைப்பு கட்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள, கொதுப்பள்ளி கிராமத்தில் செயல்-பட்டு வரும் கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தால், சுகா-தார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்-பட்டது. அப்போது, கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை, மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல் இயங்கி வருவதும், தொழிற்சாலையின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அருகிலுள்ள ஓடைகளில் வெளியேற்றியதும் தெரிந்தது.இதையடுத்து, அந்த தொழிற்சாலைக்கு, மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.