மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர் மாயம்
14-Jan-2025
ஊத்தங்கரை: ஊத்தங்கரை வேளாண் உதவி இயக்குனர் முனைவர் கருப்பையா, விடுத்துள்ள அறிக்கை:ஊத்தங்கரை வட்டார விவசாயிகளின் கவனத்திற்கு வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணி-கத்துறை, வேளாண் பொறியியல் துறை வாயிலாக விவசாயிக-ளுக்கு தனித்துவமான, பிரத்யேக அடையாள எண் அரசாங்-கத்தால் பெற, விரிவாக்க அலுவலர்கள் மூலம் முகாம் நடந்து வருகிறது. ஊத்தங்கரை வட்டார விவசாயிகள், தங்கள் நிலஉ-டைமை பதிவுகளை சரிபார்க்க, ஒரு பொன்னான வாய்ப்பு, தங்கள் கிராமம் தேடி வருகிறது.முகாமில் பங்கேற்று, தங்கள் நிலப்பதிவுகளை சரிபார்த்துக் கொள்-ளலாம். எனவே, தங்கள் பகுதி அலுவலர்களை தொடர்பு-கொண்டு, பிரத்யேக அடையாள எண்ணை பெற ஆதார் அட்டை, நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன், ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
14-Jan-2025