உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குழந்தையின் கழுத்தில் இருந்த செயின் மாயம்

குழந்தையின் கழுத்தில் இருந்த செயின் மாயம்

ஓசூர்: ஓசூரில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் செயின் மாயமானது.சென்னை சத்தியசாய் நகரை சேர்ந்தவர் அரிதாஷ். இவரது மனைவி வாசுகி (27). இவர்குளுக்கு சிவானி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் ஓசூர் உறவினர் வீட்டுக்கு வந்த அவர்கள் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு குழந்தையுடன் ஸ்வாமி கும்பிட சென்றனர். அப்போது, குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.ஐ., குமார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை