உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை

ஊத்தங்கரை: வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு குறித்த ஒத்திகை பயிற்சி, ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில், பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.வடகிழக்கு பருவமழையின் போது, எவ்வித அசம்பாவிதங்களும், உயிரிழப்புகளும் ஏற்படாமல் தடுக்க, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்பு பணிகள் செய்து காப்பாற்றுதல் தொடர்பாக, ஒத்திகை பயிற்சி நடந்தது. ஊத்தங்கரை தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தினர். இதில், ஊத்தங்கரை பி.டி.ஓ., பாலாஜி, அலுவலக பணியாளர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை