வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றிய 4 வாலிபர்களுக்கு அபராதம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த உரிகம் வனச்சரகம், தக்கட்டி வனப்பகுதியில், 4 வாலிபர்கள் உரிமம் இல்லாத நாட்-டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தனர். அவர்களை, உரிகம் வனச்ச-ரகர் முரளி மற்றும் வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்-தனர். அவர்கள், தாம்சனப்பள்ளி கணேசன், 22, அஞ்செட்டி புதுார் அருணாச்சலம், 26, விக்னேஷ், 25, திருமூர்த்தி, 25 என்பதும், வன-விலங்குகளை வேட்டையாட வனப் பகுதிக்குள் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. அவர்களுக்கு மொத்தம், 4.80 லட்சம் ரூபாய் அப-ராதம் விதித்த வனத்துறையினர், நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.