உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு

ஓசூரில் தனியார் பெண் ஊழியர் விபத்தில் சாவு

ஓசூர் : திருவண்ணாமலை மாவட்டம், பாலாநந்தல் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகள் சிந்துநதி, 23. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; கடந்த, 3 இரவு, 7:40 மணிக்கு ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தர்கா முத்துமாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த சிந்துநதி, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை