உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பல்நோக்கு கட்டடம் கட்டும் பணிக்கு பூஜை

பல்நோக்கு கட்டடம் கட்டும் பணிக்கு பூஜை

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் சோக்காடி கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய பல்நோக்கு கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கான பணியை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஒன்றிய செயலர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், சூர்யா, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலர் கார்த்திக் பால்ராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவி சுகந்தி மாது, முன்னாள் பஞ்., தலைவர் கொடிலா ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயராமன், மகேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அம்சாராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி