உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மலைக்கோவிலில் துாய்மை பணி

ஓசூர் மலைக்கோவிலில் துாய்மை பணி

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிமை விழிப்புணர்வுக்-கான குழந்தைகள் இயக்கம் சார்பில், 'என் ஊர், என் பெருமை' என்ற திட்டத்தில், நகரின் முக்கிய இடங்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்ப-டுத்தப்படுகிறது. ஓசூர் நகரின் முக்கிய பகுதியான மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நேற்று குப்பைகளை அகற்றி துாய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்-பட்டது. மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி, பணியை துவக்கி வைத்தார்.சி.எம்.சி.ஏ., ஓசூர் கிளை துணை மேலாளர் டேவிட் பாக்கியசுந்-தரம், திட்ட ஒருங்கிணைப்பாளர் மாதப்பன், நிகழ்ச்சி ஒருங்கி-ணைப்பாளர்கள் பவானி ரமேஷ், பால் டேனியல் மற்றும் எம்.ஜி.ஆர்., கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாண-வியர், கோவில் வளாகத்தில் கிடந்த குப்பையை சேகரித்து துாய்மை பணி மேற்கொண்டனர். குப்பையை உரிய தொட்டியில் போட வேண்டும். பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி