உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா

புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே புதுவை நகரில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய, 55ம் ஆண்டு தேர்த்திருவிழா நடந்தது. கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த தேர்த்திருவிழாவின் போது, நாள்தோரும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால், நவநாள் ஜெபங்களுடன் சிறப்பு திருப்பலி நடந்தது. இவ்விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, திருத்தேர் பவனி நடந்தது.முன்னதாக ஆலயத்தில், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து, புனித அந்தோணியாரின் அலங்கரித்த தேர் பவனி நடந்தது. வானவேடிக்கையுடன் துவங்கிய தேர் பவனியை, தர்மபுரி மறை மாவட்ட ஆயர், புனித நீர் தெளித்து துவக்கி வைத்தார். இதில் சுண்டம்பட்டி, புதுவை நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்த இந்த தேரின் மீது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றினை துாவி, தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை