மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
03-Aug-2025
பாகலுார், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில், 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் மொத்தம், 1,368 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. உயர் சிகிச்சை தேவைப்படுபவர்கள், மேல் சிகிச்சைக்கு, அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில், கால்களை இழந்த, 11 மாற்றுத்திறனாளிகளுக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், செயற்கை கால்கள் வழங்கும் வகையில், அளவீடு பணிகள் நடந்தன.மேலும், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர், முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அத்துடன், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்த, 48 பேருக்கு உடனடியாக காப்பீட்டு அடையாள அட்டைகளை வழங்கினர். ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார், மாற்று திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மாதேஷ், தாசில்தார் குணசிவா உட்பட பலர் பங்கேற்றனர்.
03-Aug-2025