உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தண்ணீரில் மூழ்கிய மாணவன் பலி: காப்பாற்ற முயன்ற தலைமையாசிரியரும் உயிரிழப்பு: ஓசூர் அருகே நடந்த சோகம்

தண்ணீரில் மூழ்கிய மாணவன் பலி: காப்பாற்ற முயன்ற தலைமையாசிரியரும் உயிரிழப்பு: ஓசூர் அருகே நடந்த சோகம்

ஓசூர்: ஓசூர் அருகே தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவரும். அவரை காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் பலியானது அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த எழுவப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 30 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கூஸ்தனப்பள்ளி கிராமத்தில் வசிக்கும், கவுரி சங்கர் ராஜூ, 53, என்பவர் தலைமையாசிரியராக உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fdl49kvl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும், எழுவப்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் மகன் நித்தீன், 8, என்பவர், மதியம், 1:00 மணிக்கு மேல், மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளியின் பின்புறம் உள்ள வெங்கடேஷ் என்பவரது விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு தண்ணீரை சேமித்து வைக்க, பெரிய அளவில் பள்ளம் தோண்டி, அதன் மீது பிரமாண்ட தார்ப்பாயை விரித்து, தண்ணீரை சேமித்து வைத்திருந்தார்.அந்த தொட்டிக்குள் மாணவன் நித்தீன் தவறி விழுந்தான். இதை பார்த்த பள்ளி மாணவ, மாணவியர் தலைமையாசிரியர் கவுரிசங்கர் ராஜூவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு சென்ற அவர், மாணவன் நித்தீனை காப்பாற்ற முயன்றார். ஆனால், மாணவனும், தலைமையாசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போலீசார் சடலங்களை மீட்டனர். மாணவனை காப்பாற்ற முயன்ற ஆசிரியரும் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

நிவாரணம்

தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

இராம தாசன்
மார் 05, 2025 22:04

கள்ள சாராய சாவிற்கு 10 லக்ஷம் / நீரில் மூழ்கி இறந்தால் பிராமின் என்றால் ஒன்றும் கிடையாது 2-3 லக்ஷம் - இது தான் திராவிட மாடல்


vijai hindu
மார் 06, 2025 00:23

சார் இதுதான் திராவிடம் முன்னேற்றக் கழகம் கள்ள சாராயம் குடிச்சு செத்தா பத்து லட்சம் கஞ்சா அடிச்சு செத்தா 20 லட்சம் உயிரை துச்சமா வச்சு தலைமை ஆசிரியர் அந்த மாணவனை காப்பாற்ற போராடினார் அவர் இறந்தால் 3 லட்சம் வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்


நிக்கோல்தாம்சன்
மார் 05, 2025 21:31

என்னாங்க வெங்கடேஷ்


Saai Sundharamurthy AVK
மார் 05, 2025 19:51

பள்ளிகளில் நீச்சல் பயிற்சி ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பை அரசு மேற்கொள்ள வேண்டும்.


Naga Subramanian
மார் 05, 2025 17:36

திராவிட மாடல் பள்ளம், அநியாயமாக இருவர் உயிரை குடித்து விட்டது.


Raja k
மார் 05, 2025 18:10

லூசா நீங்கள், விவசாய தோட்டத்துல கிணறு வெட்ட செலவு அதிகம் பிடிக்கும், நீர் விரையமாவதை தடுக்க சிறு குழி வெட்டி அதில் தார்பாய் விரித்து அதில் நீர் நிரப்பி பாசனத்திக்கு பயன் படுத்துவர், இதுல எங்கே வந்தது திராவிட மாடல், ஆரிய மாடல் எல்லாம், ? மூளை சலவை செய்ய பட்ட ஆள் நீ இப்படிதான் கூவுவே


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 05, 2025 16:20

சிறுவனுக்குத் தெரியாது விழுந்துவிட்டான் ........ சரி .... ஒரு தலைமையாசிரியருக்குத் தெரியவேண்டாமா நீச்சல் தெரியாதவர்களால் காப்பாற்றவும் முடியாது என்று ?? பூமி நீர் உறிஞ்சுவதைத் தடுக்க, நீரைச் சேமிக்க டார்பாலின் போட்டு வைத்திருந்தார்கள் என்றால் ஆழம் கூட அதிகம் இருக்காதே ?? புரியவில்லை ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை