வேனில் துாங்க சென்ற வடமாநில டிரைவர் சாவு
ஓசூர்: குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கிர்தாபாய், 58, சரக்கு வேன் டிரைவர். இவர், வேனை ஓட்டிக் கொண்டு சூளகிரி பகுதிக்கு நேற்று முன்தினம் வந்தார். அங்கு சின்னாறு பகுதியிலுள்ள ஒரு ஓட்டலில், வேனை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். பின்னர் வண்டியில் துாங்க சென்ற அவர், வேனிலேயே இறந்து விட்டார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.