உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த இரு நாட்களாக, 869 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 789 கன அடியாக குறைந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 701 கன அடியும், வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடியும் நீர் திறந்து விடப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் கூடிய துர்நாற்றத்துடன் தண்ணீர் வெளியேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி