உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

பள்ளி கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த கல்குமாரம்பட்டியை சேர்ந்தவர் மரியப்பா, 42, கட்டட தொழிலாளி. இவர் கடந்த, 11 மாலை அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கட்டுமான பணியில் ஈடுபட்டி-ருந்தார். அப்போது, கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கலலுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர் இறந்தார்.ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ