உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இறைவன் திருவடியை பிடித்துக் கொண்டால் துன்பங்கள் விலகும்: திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு

இறைவன் திருவடியை பிடித்துக் கொண்டால் துன்பங்கள் விலகும்: திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு

மதுரை: 'இறைவன் திருவடியை இறுக பிடித்துக்கொண்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும்' என்று ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்மதுரை தியாகராஜர் கல்லுாரியில் அனுஷத்தின் அனுக்கிரகம், கல்லுாரி நிர்வாகம் சார்பில் மறைந்த தாளாளர் கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்து வருகிறதுராம அவதாரம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: நாம் மனிதரிடம் காட்டுவது அன்பு. இறைவனிடத்தில் காட்டுவது பக்தி. ராமாயணம், மகாபாரதத்தை உலகம் கொண்டாடுகிறது. பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதி அவன் துன்பத்தை எவன் போக்குகிறானோ அவன் தான் வைஷ்ணவன். நமது மதம் சனாதன தர்மம், யாராலும் அழிக்க முடியாத ஒன்று. எங்கு சுற்றினும் ரங்கனை சேவி என்பார்கள்.பகவான் திருவடியை பிடித்துக் கொண்டால் நமது துன்பங்கள் யாவும் விலகும். ஸ்ரீ ராமன் 16 குணங்களை உடையவன். ராமாயணம் கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். ராம நாமாவை சொன்னால், கேட்டால் எல்லாம் கிடைக்கும். ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் இருக்கிறான். அதனால்தான் உடலை சுத்தத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.சொற்பொழிவு ஜூன் 16 வரை கல்லுாரியில் தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. ஏற்பாட்டை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி