உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அச்சம்பட்டியில் அச்சம் தரும் மரங்கள்

அச்சம்பட்டியில் அச்சம் தரும் மரங்கள்

அலங்காநல்லுார்: அச்சம்பட்டியில் பட்டுப்போய் அச்சம் தரும் வகையில் நிற்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அலங்காநல்லுார் - ஊமச்சிக்குளம் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மதுரை நகர், மாட்டுத்தாவணி பகுதிகளுக்கு செல்ல இச்சாலை அதிகம் பயன்படுகிறது. இங்குள்ள ரோட்டோரத்தில் அச்சம்பட்டி வரை செல்லும் பெரியாறு பாசன கிளை கால்வாயின் இரு கரைகளிலும் அதிகளவில் யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன.நன்கு வளர்ந்த, பட்டுப்போன மரங்கள் ரோட்டின் எதிர்ப்புறமாக கால்வாயின் குறுக்கே கடந்து வயல்வெளிகளில் விழுந்துள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கிறது. பல மரங்களின் துார் பகுதி வலுவிழந்துள்ளன. பலத்த காற்று வீசும் போது இம்மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பட்டுப்போன மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை