உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 1600 பேர் விடுப்பு எடுத்து போராட்டம்

1600 பேர் விடுப்பு எடுத்து போராட்டம்

மதுரை : புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பில் நேற்று முதல் 2 நாள் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.மதுரை மாவட்டத்திலும் இப்போராட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறுகையில், ''மதுரையில் 1600 பேர் 2 நாள் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளோம். புதிய பென்ஷன் திட்டத்தால் கிராம வருவாய் ஊழியர்கள் உட்பட பலர் 6 மாதங்களாக எந்த பணபலனும் பெறாமலேயே ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் தீவிரமாக போராடுகிறோம். அடுத்த கட்டமாக பிப்.,16ல் சென்னையில் முதல்வர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை