பா.ஜ.,வினர் கைது
மேலுார்: சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து பேரணி துவங்கி சென்னையில் கவர்னரை சந்திக்க முடிவு செய்திருந்தனர். இதில் கலந்து கொள்ள மேலுார் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.நேற்று பேரணியில் கலந்து கொள்ள மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன், கல்வி அலுவலர் பிரிவு நிர்வாகி ராஜு, மேலுார் நகர் தலைவர் சேவுக மூர்த்தி தலைமையில் சென்ற நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.