உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நில அபகரிப்பு வழக்கு பா.ஜ.,நிர்வாகி கைது

நில அபகரிப்பு வழக்கு பா.ஜ.,நிர்வாகி கைது

மதுரை : மதுரையில் நில அபகரிப்பு வழக்கில் பா.ஜ.,நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மதுரை ஆத்திகுளம் சந்தோஷ் ராஜ்குமார். இவர் குடும்பத்தினருடன் லண்டனில் வசித்து வந்தார். மனைவி ரத்தினமாலா. இவர்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் 30 சென்ட் நிலம் நிலையூர் பெத்தேல் நகரில் உள்ளது. அருகே பா.ஜ., நிர்வாகி குமரேசன் 46, பழைய இரும்பு கடை நடத்துகிறார். சந்தோஷ் ராஜ்குமார் இறந்துவிட்டார். நிலத்தை பார்வையிட லண்டனிலிருந்து ரத்தினமாலா குடும்பத்தினருடன் மதுரை வந்தார். போலி ஆவணங்கள் மூலம் குமரேசன் ஆக்கிரமிப்பு செய்ததாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. உறவினரான தனக்கன்குளம் சகாயராஜிற்கு பவர் எழுதி கொடுத்தார். நிலத்தை பார்வையிட்டபோது குமரேசன் போலி ஆவணங்கள் மூலம் அவரை மிரட்டினார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிலத்தை சகாயராஜ் வசம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒப்படைக்காததால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சகாயராஜ் புகார் அளித்தார். நிலமோசடி, போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து குமரேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி