உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோரிப்பாளையத்தில் பாலப்பணிகள் தீவிரம்

கோரிப்பாளையத்தில் பாலப்பணிகள் தீவிரம்

மதுரை : மதுரை கோரிப்பாளையத்தில் அமைய உள்ள மேம்பால பணிகள் தீவிரமடைந்துள்ளன. இப்பணிகளுக்காக பாலம் ஸ்டேஷன் ரோடு சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை இன்று(ஜன.,31) அகற்றுகிறது.கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைய உள்ளது. தமுக்கம் மைதானத்தில் துவங்கி, மீனாட்சி கல்லுாரி எதிரே உள்ள ரோட்டோரமாக ஏ.வி., பாலத்திற்கு இணையாக சென்று, வைகை ஆற்றை கடந்து, தென்கரையில் உள்ள அண்ணாத்துரை சிலை அருகே முடிவடைகிறது. பாலம் ஸ்டேஷன் ரோட்டில் கிளை பாலம் அமைய உள்ளது. பாலத்தின் நீளம் 2 கி.மீ., துாண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை