உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் பூத்துக்குலுங்கி நறுமணம் வீசும் கொத்தமல்லி

பேரையூரில் பூத்துக்குலுங்கி நறுமணம் வீசும் கொத்தமல்லி

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் கொத்தமல்லி செடிகள் செழிப்பாக வளர்ந்து பூத்துக் குலுங்குவதால் அப்பகுதி முழுவதும் நறுமணம் கமழ்கிறது..இப்பகுதியில் ஆண்டு தோறும் பருவமழை காலத்தில் பல ஏக்கர் பரப்பளவில், பெரும்பாலும் களிமண் நிலத்தில் கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. மழைக்கு முன்பு ஈரப்பதத்தில் நிலத்தை உழுது கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. அதன் பிறகு மழை பெய்ததும் செழித்து வளர ஆரம்பிக்கும்.தொடர்ந்து மழை இல்லாவிட்டாலும் மண்ணில் உள்ள ஈரப்பதத்தைக் கொண்டு கொத்தமல்லி வளரும். இதற்கு காரணம் களிமண் நிலத்தில் மழை பெய்தால் அதன் ஈரம் காய்வதற்கு பல நாட்கள் ஆகும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விதைக்கப்பட்ட கொத்தமல்லி செடிகள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. தழைகள் பழுக்க ஆரம்பித்து விடும். காய்கள் முற்றிய பிறகு அறுவடை செய்து விதை மல்லி பிரித்து எடுக்கப்படும். பூத்துக் குலுங்கும் கொத்தமல்லியால் இப்பகுதி முழுவதும் நறுமணம் வீசுகிறது.விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் விதைக்க 5 முதல் 6 கிலோ வரை கொத்தமல்லி தேவைப்படும். பெரும்பாலும் உரமும், பூச்சி மருந்து பயன்படுத்துவதும் மிகவும் குறைவு. இயற்கையான காலநிலையிலேயே கொத்தமல்லி வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கருக்கு 250 கிலோ கிடைக்கும். சைவம் என்றாலும் அசைவம் என்றாலும் கொத்தமல்லிக்கு உணவில் பிரத்யேக இடம் உண்டு. உடல் ஆரோக்கியத்துக்கும் மிகுந்த பலனை தரும். இதனால் இதற்கு எப்போதும் மவுசு உண்டு, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை