உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறை கைதியை தாக்கிய வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவு

சிறை கைதியை தாக்கிய வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவு

மதுரை: திருச்சி மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை அங்கம்மாள் தாக்கல் செய்த மனு: என் மகன் ஹரிகரசுதன். போதைப்பொருள் வழக்கில், அவருக்கு, 2024ல் மதுரை சிறப்பு நீதிமன்றம், 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மதுரை மத்திய சிறையில் மகன் அடைக்கப்பட்டார். அவர், 10ம் வகுப்பு தேர்வில், 400 மதிப்பெண் பெற்றார். ஐ.டி.ஐ., படிப்பதற்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவரை, ஜூலை 26ல் சிறை அதிகாரி ஒருவர் தாக்கினார். மகன் காயமடைந்தார். மகனை அவரது வழக்கறிஞரிடம் பேச அனுமதிக்கவில்லை. மகனை தனிமை சிறையில் அடைத்தனர். மனித உரிமை மீறல் நடந்துள்ளது. தாக்குதலுக்கு காரணமான சிறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலர், சிறைத்துறை டி.ஜி.பி., திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் புகழேந்தி ஆஜரானார். நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'சம்பவம் தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசார், இரு வெவ்வேறு வழக்குகள் பதிந்துள்ளனர். அவை, திருச்சி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை