உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உவரி கடற்கரையில் கேன்டீன் தற்போதைய நிலை தொடர்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உவரி கடற்கரையில் கேன்டீன் தற்போதைய நிலை தொடர்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த அரசு தாக்கல் செய்த பொதுநல மனு: உவரி கடற்கரையில் சர்ச் அருகே அரசுக்கு சொந்தமான தடுப்பணை, மீன் இறங்கு தளம் அமைந்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்குட்பட்ட இப்பகுதியில் 500 மீ., துாரத்தில் எவ்வித கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது. விதிகளுக்கு புறம்பாக உவரி பாதிரியார் நிர்வாகம் தரப்பில் கேன்டீன் அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் பைபர் படகுகளை நிறுத்த அமைக்கப்பட்டிருந்த கம்பங்களை சேதப்படுத்தியுள்ளனர். கட்டுமானப் பணியை நிறுத்த அரசு தரப்பு மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல் சட்டவிரோதமாக கட்டுமானப் பணி தொடர்கிறது. கேன்டீன் துவக்க விழாவிற்கு தமிழக சபாநாயகர் அப்பாவுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேன்டீன் அமைக்க மாற்றாக உவரியில் காலியிடங்கள் உள்ளன. தடை செய்யப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கேன்டீன் அமைப்பதை அகற்ற மீன்வளத்துறை இயக்குனர், கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், பி.டி.ஆஷா அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ரஜினி ஆஜரானார். அரசு தரப்பில்,'கட்டுமானப் பணியை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,' என தெரிவித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். அரசு தரப்பில் செப்.,24 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை