மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : மேலுார் அருகே மேலவளவு அஜய் சூர்யா ரத்தினம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மேலவளவில் மே 31ல் மஞ்சுவிரட்டு நடத்த உள்ளோம். அனுமதி, பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கலெக்டர், எஸ்.பி.,மேலவளவு போலீசாருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.