உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்தில் அறங்காவலர்கள் பதவியேற்பு

குன்றத்தில் அறங்காவலர்கள் பதவியேற்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்களாக மணிச்செல்வன், பொம்மதேவன், சத்யப்பிரியா, சண்முகசுந்தரம், ராமையா ஆகியோர் நேற்று பதவி ஏற்றனர். சத்யப்பிரியா குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கோயில் துணை கமிஷனர் சுரேஷ், ஆய்வாளர் இளவரசி, கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அறங்காவலர்களுக்கு தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி, இளைஞரணி அமைப்பாளர் விமல், தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் செல்வம், கவுன்சிலர் சிவா வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !