உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் டிச. 3ல் மலைமேல் மஹா தீபம்

 திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றம் டிச. 3ல் மலைமேல் மஹா தீபம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச. 3ல் மலைமேல் மஹா தீபம் ஏற்றப்படுகிறது. நேற்று காலை சர்வ அலங்காரத்தில் சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். காலை 10:55 மணிக்கு கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இன்று முதல் டிச. 4 வரை தினமும் காலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வருவர். சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை திருவிழா 6ம் நாளான நவ. 30ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, டிச. 1 காலையில் கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலையில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்பாளும், காமதேனு வாகனத்தில் சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சியிலும் அருள்பாலிப்பர். டிச. 2 காலை நடராஜர், சிவகாமி அம்மன் புறப்பாடு, இரவு 7:15 மணிக்கு பட்டாபிஷேகம், டிச. 3 காலை தேரோட்டம், மாலையில் மலைமேல் மஹாதீபம் ஏற்றுதல், இரவு சொக்கப்பனை தீபக் காட்சி, டிச. 4ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ