உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோழவந்தானில் கிருஷ்ண ஜெயந்தி

சோழவந்தானில் கிருஷ்ண ஜெயந்தி

சோழவந்தான் சோழவந்தானில் கொண்டல் ராய ரவுத் நவநீதகிருஷ்ண பஜனை மடம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.மடத்தில் பஜனை வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணர், ராதை உட்பட கடவுளர்கள் வேடத்தில் பக்தர்கள் வலம் வந்தனர். மடத்தின் முன்பு உறியடி விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர்கள் குப்புராஜ், பாண்டியராஜன், பஜனை குழுவினர் ஏற்பாடு செய்தனர். சோழவந்தான் பாண்டுரங்க பக்த சபை சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் நடந்தது. யாக பூஜைகள் செய்து பஜனை வழிபாடு நடந்தது. கிருஷ்ணர், பலராமர், ராதை வேடமிட்டு நான்கு ரத வீதிகளில் வலம் வந்து கோயிலில் உறியடி விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பெருமாள் கோயில் சன்னதி நண்பர்கள் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி