வழக்கறிஞர்கள் உறுதிமொழி
மேலுார்; மேலுார் சார்புநீதிமன்ற வளாகத்தில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர் அணி சார்பில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 75 ம் ஆண்டை முன்னிட்டு வழக்கறிஞர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கலாநிதி தலைமை வகித்தார். அரசு வழக்கறிஞர்கள் சபாபதி, சேகர், வழக்கறிஞர் ஸ்டாலின் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.