உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பக்கத்துவீட்டு மின் ஒயரை கட் செய்தவர் கைது

பக்கத்துவீட்டு மின் ஒயரை கட் செய்தவர் கைது

திருமங்கலம்: கள்ளிக்குடி டி.கொக் குளத்தைச் சேர்ந்த மீனா 74, இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தம்மாள் 50, இவரது உறவினரிடம் இடத்தை வாங்கி வீடு கட்டி மீனா குடியிருந்து வருகிறார். தங்களது பூர்வீக இடத்தை மீனா வாங்கியதால் ஆறுமுகத்தம்மாள் குடும்பத்தினர் அவர் மீது விரோதத்தில் இருந்தனர். இந்நிலையில் மீனா வீட்டுக்கு செல்லும் மின் ஒயரை ஆறுமுகத்தம்மாளின் மகன் பகவதி துண்டித்தார். கூடக்கோவில் போலீசார் பகவதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ