உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புடினுடன் மோடி போனில் பேச்சு

புடினுடன் மோடி போனில் பேச்சு

புதுடில்லி : ரஷ்ய அதிபர் புடினுடான பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இது குறித்து மோடி தனது 'எக்ஸ்' வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: ரஷ்ய அதிபர் புடினுடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்தது. இரு நாடுகளிடையே நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் சாதகமான எதிர்கால திட்டங்கள், முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளதுஉட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய பிரச்னைகளில் பயனுள்ள கருத்துப்பரிமாற்றமும் இருந்தது. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !