உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி

திருமங்கலம் : திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் 18, டூ வீலர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு 7:00 மணிக்கு நண்பர் சச்சினுடன் பொருட்கள் வாங்க டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார்.உசிலம்பட்டி ரோடு தாளை முத்தையா கோயில் அருகே திருமங்கலத்தில் இருந்து தேனிக்கு சென்ற தனியார் பஸ் மோதியதில் ரமேஷ் சம்பவயிடத்திலேயே பலியானார். காயம் அடைந்த சச்சின் சிகிச்சையில் உள்ளார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை