ரயில் பயணச்சீட்டு விற்பனை கியூஆர் கோடு பயன்பாடு அதிகரிப்பு
மதுரை: மதுரை கோட்டத்தில் உள்ள 11 ரயில் நிலையங்களில் கடந்த ஆக்ஸ்ட் முதல் 151 இடங்களில் கியூ.ஆர்.,கோடு முறையில் பணப்பரிவர்த்தனை நடக்கிறது. முதல்மாத மொத்த வருமானத்தில் 1.76 சதவீதம் கியூ ஆர் கோடு மூலம் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இது செப்டம்பர் கடைசியில் 5.70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த புதிய பண பரிவர்த்தன முறையால் பணமில்லா மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு வழிஏற்பட்டுள்ளது. பயண சீட்டுக்கு பணம் செலுத்துதல், மீதி சில்லரை பெறுதல் போன்றவை இன்றி விரைவாக பயணச்சீட்டு பெற முடிகிறது. பயணச்சீட்டு அலுவலகம் முன்பு காத்திருக்கும் நேரமும் குறைகிறது.