| ADDED : ஜன 06, 2024 06:19 AM
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுந்தரராசா உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவிலான மகளிர் கையுந்து பந்து போட்டி நடந்தது.இதில் ஆறு அணிகள் விளையாடினர். ஈரோடு எஸ். டி .ஏ. டி., அணி முதலிடம், சேலம் ஏ.என் மங்கலம் செயின்ட்மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2 ம் இடம், திண்டுக்கல் பிரான்சிஸ் சேவியர் 3ம் இடம், சுந் தரராசா உயர்நிலைப் பள்ளி 4 ம் இடம், கடலுார் செயின்ட் அனீஸ் 5ம் இடம், சென்னை எஸ்.டி.ஏ.டி 6ம் இடம் பிடித்தனர். மகளிருக்கான போட்டியில் எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக அணி முதலிடமும், ஈரோடு பி.கே.ஆர் அணி 2ம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.பி பாஸ்கர், கையுந்து பந்து கழக தலைவர் பிரபாகரன், தலைவர் ராஜேந்திரன், ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் வெங்கடாசலம், துணைக்கமிஷனர் ராமசாமி செய்திருந்தனர்.