உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைத்த மாணவர்கள்

சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைத்த மாணவர்கள்

சோழவந்தான் : தேனி ஸ்ரீரங்கபுரத்தில் தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை, தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கலை கழகம் மற்றும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் உலக சாதனைக்கான சிலம்பாட்டத்தை இணைந்து நடத்தினர்.அதிகமான மாணவர்கள் ஒன்றிணைந்து புலி முகமூடி அணிந்து நடனம் ஆடிக்கொண்டு சிலம்பத்தில் பல்வேறு சுற்று முறைகளை சுற்றிக்கொண்டு 4 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனைக்காக முயற்சித்தனர்.தமிழகத்தில் இருந்து 221 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் திருவேடகம் விவேகானந்த கல்லுாரி மாணவர்கள் அருண் பிரகதீஷ், சிவபிரகாஷ், கார்த்திகேயன், பூமி ராஜா, ஹரிஷ், அருண்குமார், நாகபாண்டி, மாதவன், விகாஷ், வேல் மணிகண்டன், விக்னேஷ், சந்தோஷ், ஜனார்த்தனன், திரவிய கண்ணன் உலக சாதனை படைத்தனர்.மாணவர் அருண் பிரகதீஷ் சிறந்த வீரருக்கான விருது பெற்றார். சாதித்த மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் நிரேந்தன், பேராசிரியர் சாமிநாதன், யோகா மாஸ்டர் இருளப்பன் ஆகியோரை கல்லுாரி செயலர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மனந்த, முதல்வர் வெங்கடேசன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !