உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழக சட்டசபை மாதிரி நிகழ்ச்சி

தமிழக சட்டசபை மாதிரி நிகழ்ச்சி

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி அரசியல் அறிவியல் துறை சார்பில் இந்திய அரசியலமைப்பு சமகால சவால்கள், ஜனநாயகத்தை பாதுகாத்தல் மற்றும் குடிமக்களின் பொறுப்பு என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, மாணவர்களின் மாதிரி சட்டசபை நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார். மாணவர் ராஜ்குமார் துவக்கி வைத்து பேசினார். உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி பேராசிரியர் பால்பாண்டி பேசினார். மாதிரி சட்டசபை நிகழ்ச்சியில் சபாநாயகர், துணை சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள் பொறுப்புகளில் மாணவர்கள் பங்கேற்று விவாதம் நடத்தினர். மாணவர் வெங்கடேஷ் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் பொம்மி நன்றி கூறினார். பேராசிரியர்கள் முரளி பிரசாத், ஆனந்தகுமார், ரேவதி ஒருங்கிணைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை