உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அறுபடை வீடு பயணம் துவக்கம்

 அறுபடை வீடு பயணம் துவக்கம்

திருப்பரங்குன்றம்: அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடு ஆன்மிக பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மதுரை, சிவகங்கை உட்பட வெளிமாவட்ட பக்தர்கள் 200 பேர் நேற்று காலை திருப்பரங்குன்றம் வந்தனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் மாரியப்பன், கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் பயணத்தை துவக்கி வைத்தனர். இன்று சோலைமலை முருகன், திருச்செந்துாரில் தரிசனம் முடிந்து அங்கு இரவு தங்குகின்றனர். நாளை சுவாமிமலை, திருத்தணி செல்கின்றனர். நவ. 28ல் பழநி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ