உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா

திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது.கோயிலில் ஜன.12ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கோயிலில் இருந்து புறப்பாடாகி ரத வீதிகளில் வீதி உலா முடிந்து ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குளத்தில் மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பம் மூன்று சுற்றுக்கள் சுற்றி வந்தது.

பத்தி உலாத்துதல்

மாலை 6:30 மணிக்கு தெப்பக்குளம் மைய மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி பத்தி உலாத்துதல் முடிந்து மீண்டும் மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பம் மூன்றுமுறை வலம் வந்தது. தெப்பத் திருவிழா முடிந்து திருக்கண் மண்டகப்படிகளில் சுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன்பு எழுத்தருளினார். அங்கு சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ