உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வி.எச்.பி., வலியுறுத்தல்

பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வி.எச்.பி., வலியுறுத்தல்

மதுரை: 'அறுபது வயதை கடந்த கோயில் பூஜாரிகளுக்கு வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மதுரையில் வி.எச்.பி., மாநில இணைச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது: திருச்செந்துார், ராமேஸ்வரம், தஞ்சாவூர் கோயில்களில் அடுத்தடுத்து பக்தர்கள் இறந்தது வேதனையை தருகிறது. உண்டியல் வருமானத்தை மட்டுமே குறியாக கொண்டுள்ள தி.மு.க., அரசு கோயிலில் அடிப்படை வசதிகளை செய்ய தவறியதே இதற்கு காரணம்.தமிழகத்தில் 60 வயதை கடந்த பூஜாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். கோயில் பூஜாரிகளுக்கும் முறையான வருவாய் இல்லை. தவிர அனைத்து கோயில்களிலும் தினசரி அன்றாட பூஜைகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராம கோயில் பூஜாரிகளுக்கு முறையான சம்பளம், 60 வயதை கடந்த பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ