மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
மயிலாடுதுறை:கலவர வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராகாத வி.சி.க., தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.மயிலாடுதுறையில் கடந்த 2003ல் தமிழக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்திற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவன் தலைமையில், மயிலாடுதுறை எண்:1 காமராஜர் சாலையில் இருந்து ஊர்வலம் புறப்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், வினர் எண்:2 காமராஜர் சாலை வழியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது. அதில், பொது சொத்துக்கள் சேதமடைந்தது.இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக இவ்வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு திருமாவளவன் எம்.பி., தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதிலும் திருமாவளவன் ஆஜராகவில்லை.மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்களும், வராமைக்கான காரணம் தெரிவித்து கோர்ட் அனுமதி பெறும் மனுவையும் தாக்கல் செய்யவில்லை.அதையடுத்து, திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.
23-Sep-2025
22-Sep-2025 | 1