உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளர் 2 பேர் பலி

நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளர் 2 பேர் பலி

மோகனுார்: மோகனுார் யூனியன், பரளி பஞ்.,க்குட்பட்ட கங்காணிப்பட்-டியை சேர்ந்தவர் ராமசாமி, 65; கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, அங்குள்ள காட்டு பகுதியில் விறகு சேக-ரிக்க சென்றுள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அடிப்பட்டு உயிரிழந்தார்.இதேபோல், மோகனுார் புது தெருவை சேர்ந்தவர் வெங்க-டேசன், 45; கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை, 9:00 மணிக்கு, மோகனுார் வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, தடுமாறி தண்ணீரில் விழுந்துள்ளார். அக்கம் பக்-கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோ-தனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இரண்டு சம்பவம் குறித்து, மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி