உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை காயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை காயம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை படுகாயமடைந்தது.குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை, டீச்சர்ஸ் காலனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சிறிய குதிரை அடிபட்டு கிடந்தது. கால்நடை டாக்டர் செந்தில்குமார் நேரில் வந்து முதலுதவி அளித்தார். இது போல் நகரின் பல பகு-திகளில் குதிரைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. குதிரைகளை மேயவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை