ஏப்ரலில் வரி செலுத்தினால்5 சதவீதம் ஊக்கத்தொகை
ஏப்ரலில் வரி செலுத்தினால்5 சதவீதம் ஊக்கத்தொகைபள்ளிப்பாளையம்:'பள்ளிப்பாளையம் நகராட்சிக்கு, 2025 - 26ம் ஆண்டு வரியினங்களை ஏப்ரலில் செலுத்தினால், ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்' என, நகராட்சி கமிஷனர் தயாளன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட, 21 வார்டு பகுதிகளிலும், 2025-26ம் ஆண்டுக்கான நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை, ஏப்ரல் மாதத்திலேயே செலுத்தி, ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயனடையலாம். மேலும், நிலுவையில் உள்ள பாக்கி தொகையை செலுத்தாதவர்களுக்கு கூடுதலாக, ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதோடு சொத்தை ஜப்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.