உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்: தமிழ்நாடு அரசு எஸ்.சி., - எஸ்.டி., அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகே, அம்பேத்கரின், 68வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் மஞ்சுநாதன், துணை தலைவர் பெரிய-சாமி, இணை செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், அம்-பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்துாவி, மரியாதை செலுத்தினர்.பா.ஜ., சார்பில், அக்கட்சியின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தொடர்ந்து, அம்பேத்கரின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் ராம்-குமார், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், மத்திய அரசு பிரிவு லோகேந்திரன், ஆன்மிக பிரிவு செல்வம், சின்னசாமி உள்-பட பலர் பங்கேற்றனர். பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், லோக் ஜனசக்தி கட்சி சார்பில், அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஆதவன், மாவட்ட தலைமை பொது செய-லாளர் சீனிவாசன், நகர செயலாளர் பாலு, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெண்ணந்துாரில், வி.சி.க., பேரூர் செயலாளர் நட-ராஜன் தலைமையில், அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை