24ல் நாமக்கல், ப.பாளையத்தில்விவசாயிகள் குறைதீர் கூட்டம்
24ல் நாமக்கல், ப.பாளையத்தில்விவசாயிகள் குறைதீர் கூட்டம்நாமக்கல்:'வரும், 24ல், நாமக்கல், பள்ளிப் பாளையத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., தலைமையில், வரும், 24 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. நாமக்கல்லில், நாமக்கல் பி.டி.ஓ., அலுவலகத்திலும்; திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பாளையம் பி.டி.ஓ., அலுவலகத்திலும் நடக்கிறது.கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.