உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதை பொருட்களால் பாதிப்பு பொது மக்களுக்கு விழிப்புணர்வு

போதை பொருட்களால் பாதிப்பு பொது மக்களுக்கு விழிப்புணர்வு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பிரிவு சாலை பகுதியில், திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸ் சார்பில், இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அதில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர். கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் உப-யோகிப்பதால் ஏற்படும் தீமைகள், பாதிப்பு குறித்தும், கலை நிகழ்ச்சி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்-பட்டது. மதுவிலக்கு எஸ்.ஐ.,க்கள் வெற்றிவேல், சங்கீதா மற்றும் போலீசார், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ