மேலும் செய்திகள்
நாளை தி.மு.க., கூட்டம்கட்சியினருக்கு அழைப்பு
22-Feb-2025
நாமக்கல்: 'நாளை (பிப்., 25) நடக்கும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில், கட்சியினர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என, தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்-துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாளை (பிப்., 25), மாலை, 6:00 மணிக்கு மாவட்ட கட்சி அலுவ-லகத்தில் நடக்கிறது. அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதி-வேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், வரும் மார்ச், 1ல், கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, டவுன் பஞ்., செயலாளர்கள், பொறுப்-பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணி-களின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
22-Feb-2025